இலங்கையில் இன்றைய (04) தினம் மேலும் 122 கொரோனா வைரசு தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களுள் 18 பேர் பேலியகொடை கொரோனா வைரசு தொற்று கொத்தணியுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள். மேலும் 07 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த மேலும் 187 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இதன்படி நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று இரண்டு கொவிட் மரணங்களை பதிவு செய்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.