கவுதம் மேனனின் கனவுப்படம் 'துப்பறியும் ஆனந்த்'

காதல் படங்களாகட்டும் ஆக்ஷன் படங்களாகட்டும் தனக்கென ஒரு ஸ்டைலிஷான பாணியல் படங்களை இயக்கி வருபவர் கவுதம் மேனன். அதனால் இவரது படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் வட்டம் உண்டு. அந்த வகையில் இவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாக காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படமும் அப்படி ஒரு ஸ்டைலிசான ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. விரைவில் அந்த படம் வெளியாகவும் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் வெற்றிகரமாக நடந்த பிறகு தான் … Read more

30 வருடங்களுக்குப் பிறகு சந்திப்பு – மதுபாலா மகிழ்ச்சி

தமிழ் சினிமா உலகம் மட்டுமல்லாது இந்திய சினிமா உலகமும் திரும்பிப் பார்க்க வைக்கும் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தமிழில் 'இந்தியன் 2', தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' என இரண்டு பிரம்மாண்டப் படங்களை இயக்கி வருகிறார். இந்த ஆண்டில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி இந்தியத் திரையுலகத்தில் வசூல் சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்குனராக அறிமுகமான 'ஜென்டில்மேன்' படம் 1993ம் ஆண்டு வெளியானது. அப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். அவரது அப்பாவித்தனமான … Read more

தனியொருத்தியாக ஒரு படத்தை உருவாக்கிய சாதனை பெண்

சினிமாவின் அனைத்து பணிகளையும் ஒருவரே செய்து ஒரு படத்தை உருவாக்கும் சாதனை முயற்சிகள் அவ்வப்போது நடந்துள்ளது. கணேஷ் பாபு என்ற நடிகர் மற்றும் இயக்குனர் காட்டு புறா, நானே வருவன் உள்ளிட்ட சில படங்களில் 24 துறைகளில் பணியாற்றி சாதனை படைத்தார். 'வெங்காயம்' படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் தற்போது 'தி ஒன்' என்ற படத்தின் அனைத்து பணிகளையும் அவரே செய்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவின் 31 துறைகளை கையாண்டு பல விருதுகளை பெற்று சாதனை … Read more

சத்தமின்றி அடுத்த படத்தை முடித்த மணிகண்டன்

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மணிகண்டன், 'ஜெய் பீம்' படத்தின் மூலம் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். அதன்பிறகு அவர் நடித்த 'குட் நைட்' படம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியது. கடைசியாக வெளிவந்த 'லவ்வர்' படம் அவரது வணிக பரப்பை விரிவுபடுத்தியது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சத்தமின்றி நடித்து முடித்திருக்கிறார் மணிகண்டன். சினிமாக்காரன் என்ற நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி உள்ளார். … Read more

கொலை மிரட்டல் : நடிகை சரண்யா மீது போலீஸில் புகார்

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர். பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சரண்யா – ஸ்ரீதேவி … Read more

பிளாஷ்பேக் : ரியல் ஹீரோ ஆனந்தன்

சினிமாவில் டாப்பில் உள்ள நடிகர்கள் எல்லாம் சண்டை காட்சியில் பின்னி பெடலெடுப்பார்கள். ரசிகர்களும் அதை பார்த்து விசிலடித்து, கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் நிஜத்தில் அந்த சண்டை காட்சிக்கு பொறுப்பானவர்கள் நிஜமான சண்டை கலைஞர்கள். நடிகர்களின் டூப்புகள். சண்டை காட்சியிலும் டூப் இல்லாமல் நடித்த நடிகர்கள் மிகவும் அபூர்வம். அந்த ஆபூர்வங்களில் ஒருவர் சி.எல்.ஆனந்தன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நடனம், சண்டை கலைகளை முறையாக கற்று வந்தவர் ஆனந்தன். குறிப்பாக வாள் சண்டையில் கைதேர்ந்தவர். அவரின் இந்த திறமையை … Read more

அனிமல் 2வாக உருவாகும் அனிமல் பார்க்

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன் பிறகு அந்த படத்தின் ரீமேக்கான கபீர் சிங் மூலமாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். அங்கே வெற்றி பெற்றதும் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. கச்சிதமாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த படத்தை வெற்றிப் படமாக்கியதுடன் ஆயிரம் கோடி வசூல் கிளப்பிலும் அதை இணைத்தார் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படம் வெளியான நாளிலிருந்து பலவிதமான சர்ச்சைகளையும் … Read more

புது சீரியலில் கமிட்டான யமுனா சின்னத்துரை

சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரை யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமானார். தவிர திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெயில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், செய், கொலை ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. யாரடி நீ மோகினி தொடருக்கு பின் சீரியல் எதிலும் கமிட்டாகமல் இருந்த யமுனா, தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள வீட்டுக்கு வீடு வாசல் படி என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த சீரியலின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள … Read more

ஆலியா பட் அணிந்த நெக்லஸ் விலை 20 கோடி?!!!!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் கதாநாயகியாக நடித்ததால் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற 'ஹோப் காலா' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் விலை 20 கோடி மதிப்புள்ளது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். நீல நிற சபையர் கல், வைரம் பதித்த அந்த நெக்லஸ் ஆலியாவின் அழகான கழுத்தை அலங்கரித்துள்ளது. சில லட்சங்களில் ஆடைகள், ஹேண்ட் … Read more

சீரியல் நடிகை அஸ்ரிதா ஸ்ரீதஸ் ஹாட் கிளிக்ஸ் வைரல்

கேரளாவை சேர்ந்த அஸ்ரிதா ஸ்ரீதாஸ் குழந்தை நட்சத்திரமாக மீடியாவில் அறிமுகமானார். இதுவரை 35க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள அஸ்ரிதா, தமிழில் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலங்களில் மாடலான உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் குட்டையான உடை அணிந்து அஸ்ரிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை மயக்கி டிரெண்டிங்கில் இடம்பிடித்து … Read more