ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து: வேன்-லாரி மோதி 7 பக்தர்கள் பலி

திருப்பதி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள்- ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில், பலவிதமான யோசனைகளை மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததை பார்த்தேன், மகிழ்ச்சியாக இருந்தது.  நம்மிடம் தற்போதுள்ள கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். இதுநாள் வரை நாம் தேசத்தை பார்த்த … Read more

கேரளாவில் 15 வயது சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம்- சிறுவன் உள்பட 2 பேர் கைது

திருவனந்தபுரம்: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் இடுக்கியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு வந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று அந்த பகுதியை சேர்ந்த நண்பருடன் அருகில் உள்ள சந்தன பாறைக்கு சென்றார். பூம்பாறை பகுதியில் இருவரும் சென்ற போது அங்கு வாலிபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் சிறுமியையும், அவரது நண்பரையும் வழிமறித்தனர்.சிறுமியின் நண்பரை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தூக்கி சென்றனர்.அங்கு … Read more

சீன பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்

பீஜிங்: சீனாவில் 3 முதல் 6 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கான பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள் இடம் பெற்றிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த படங்கள் இனரீதியான மற்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் சில படங்கள் பார்ப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களில் சிறுவர், சிறுமிகள் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல வரையப்பட்டிருந்தது. மேலும் குழந்தைகள் நாக்கு … Read more

மேல்சபை எம்.பி. தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் சி.வி.சண்முகம்- தர்மர் மனுதாக்கல்

சென்னை: மேல்சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் இருவரும் இன்று காலையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காலை 10 மணியளவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்தனர். தலைமைக்கழகத்தில் சிறிது நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அனைவரும் கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்கள். அங்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய்- பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி  முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.  கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், … Read more

உலகின் மிக ஆபத்தான விஷத்தை பயன்படுத்தும் ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ:  உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பல அயல்நாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறின. இருப்பினும் ரஷ்ய அதிபர் புதின் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளுக்கு பதிலடி தருவேன் என கூறி வருகிறார். மேற்கத்திய நாடுகள் ரஷியாவை எதிர்த்தாலும், அந்நாட்டிடம் இருந்துதான் எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. … Read more

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமான பாகங்கள் கண்டுபிடிப்பு- 14 உடல்கள் மீட்பு

காத்மாண்டு: நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் சுற்றுலா நகரான பொக்காராவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். நேற்று காலை 10.15 மணிக்கு இதுபோல சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோம்சாம் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள சிப்பந்திகள் என 22 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு … Read more

பஞ்சாபி பாடகர் படுகொலை- சிபிஐ, என்ஐஏ விசாரணை கோரும் தந்தை

சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரபல பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்ற மறுநாள் அவரை கொலை செய்துள்ளனர்.  இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் பாடகர் … Read more

இந்திய தலித் பிஷப் கர்தினால் ஆகிறார்- ஆகஸ்டு மாதம் பதவி ஏற்பு விழா

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையில் போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் பதவி வகிப்பவர்கள் கர்தினால்கள். இவர்கள் தான் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வார்கள். கர்தினால்களில் அதிகமான வாக்குகள் பெறுகிறவர் தான் புதிய போப் ஆண்டவராக முடியும். கத்தோலிக்க திருச்சபை விதிகளின்படி 120 பேர் கர்தினால்களாக பதவி வகிப்பார்கள். அந்த வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 பிஷப்புகளை, கர்தினால்களாக பதவி உயர்த்தி போப் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இவர்களில் 2 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கோவா-டமான் மறை … Read more