குழந்தையை முதல்வரிடம் தூக்கி எறிந்த தந்தை..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் சாகர் மாவட்டத்தில் மாநாடு நடந்திருக்கிறது. மாநாட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, முதல்வரை நோக்கி ஒரு வாலிபர் தனது ஒரு வயது குழந்தையை தூக்கி வீசி இருக்கிறார். இதை பார்த்ததும் பதறிய முதல்வர் பேசுவதை நிறுத்திவிட்டு குழந்தை வீசப்பட்ட திசையை நோக்கி ஓடி வந்திருக்கிறார். இதை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் நிலைமையை உணர்ந்து குழந்தையைப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது … Read more

குட் நியூஸ்..!! கிசான் சம்மன் நிதியின் அடுத்த தவணை எப்போ தெரியுமா ?

ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தின் மூலம் நேரடி நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், நாட்டின் தகுதியுள்ள மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் முதல் தவணையும், … Read more

இனி சாலையில் ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ – வெளியான புதிய நடைமுறை..!!

மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட் டிவைஸ்-ஐ(Electronic Enforcement Device) பயன்படுத்தி போக்குவத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. மேலும், போக்குவரத்து காவலர்கள் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  அதிக … Read more

முதல்வர் முன்னாள் முதல்வர் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு இறந்தால் 10 கோடி தருகிறேன்- சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றால், கொடநாடு கொள்ளை வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமி பதவி விலகியிருக்க வேண்டும். நாட்டின் முதலமைச்சராக வாழ்ந்த இடம் கொடநாடு பங்களா. அங்கு ஒரு நொடி கூட மின்சாரம் துண்டிக்கப்படாது. ஏனெனில் அதற்கு தனி மின்மாற்றி உள்ளது. அப்படி இருக்கிற இடத்தில் ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொல்லப்பட்டனர். கொன்றவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முதலமைச்சர் … Read more

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்..!!

கடந்த சில மாதங்களில் பிரபலங்கள் அடுத்தடுத்து மரணமடைந்துவருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் மனோபாலாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து ரசிகர்கள் மீண்டுவருவதற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 80களில் ரஜினி, கமல் ஆகியோர் படங்களில் சிறுவேடங்களில் நடித்துவந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற கமல் படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களில் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர்கள் என்பது … Read more

நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு!!

நடிகை ராஷ்மிகாவின் வள்ளி கதாபாத்திரம் குறித்து நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் பேசியிருப்பது சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகை ராஷ்மிகா ‘ஸ்ரீவள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில், இந்த … Read more

ஈபிஎஸ் உடன் இணைய தயார் என திருமாவளவன் அறிவிப்பு!!

மதுவிலக்கை அமல்படுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து போராட தயாராக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், மது விற்பனையை தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றார். எனவே மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளச்சாராய ஒழிப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மதுவிலக்குக்கு ஆதரவாக எடப்பாடி … Read more

புதியதாக துவங்கப்பட்ட தொடரில் இருந்து பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா விலகல்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட தொடர் ‘சீதாராமம்’. கந்தசாமி என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் ப்ரியங்கா மற்றும் ஜே இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரேஷ்மா, இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முதல் ஒளிபரப்பை துவங்கிய இந்த தொடர், டி.ஆர்.பி-யிலும் நல்ல ரேடிங்கை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ப்ரியங்கா, திடீரென சீரயலில் இருந்து … Read more

வெயிலில் நடந்து சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு!!

கடும் வெயிலில் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்த 8 மாத கரப்பிணியான சோனாலி வாகத் (21) மருத்துவமனைக்கு சென்று அடிக்கடி உடல் பரிசோதனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இவர் வசிக்கும் பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால், வீட்டில் இருந்து சுமார் 3.2 கி.மீ தூரம் வரை நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். … Read more

கோவை திமுக பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம்..!!

கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து இன்று முதல் தகுதி இழக்கின்றார். இது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு, நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில் வெளியிடுவார். அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். நிவேதா கோவை மாநகராட்சி மன்ற … Read more