புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் – கண்டனம்!!

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிப்பு தொழிலகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். 13.05.2023இல் அவர்கள் தங்கியிருந்த கொட்டகையை உடைத்து, உள்ளே மண்ணெண்ணெய் நனைத்த துணியில் தீ வைத்து வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நான்கு வட மாநிலத் தொழிலாளர்கள் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் … Read more

“ஒரு பாஜக பெண் எம்.பி. கூட ஆதரவு தெரிவிக்கவில்லை!!”

பாலியல் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு பாஜகவை சேர்ந்த ஒரு பெண் எம்.பி கூட ஆதரவு தெரிவிக்கவில்லை என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியு மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீராங்கனை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் … Read more

காவல் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!!

கள்ளச்சாராயத்தால் 12 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான … Read more

பெண் குழந்தையை தத்தெடுத்தார் விருமாண்டி பட நாயகி..!!

1995-ல் வெளியான ‘கதாபுருஷன்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அபிராமி. அதனைத் தொடர்ந்து, பத்திரம், ஞாங்கல் சந்துஷ்தரனு, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன்பின், 2001-ல் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் … Read more

2 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி முதல் வரும் 29ஆம் தேதி வரை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் … Read more

அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகர் பிரித்விராஜ் அறிவிப்பு..!!

2002-ல் வெளியான ‘நந்தனம்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் பிரித்விராஜ். அதை தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60க்கும் மேல் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே 2005-ல் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வசந்தபாலன் இயக்கும் காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் … Read more

கோவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமீதா..!!

17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, 2002-ம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து தமிழில் 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து … Read more

மிஸ் பண்ணிடாதீங்க!! இந்திய கடற்படையில் வேலை..!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Chargeman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 372 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணியின் பெயர்: Chargeman-II (redesignated as Chargeman) காலி பணியிடங்கள்: 372 வயது வரம்பு:விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு … Read more

பெற்ற தந்தைக்கு இதை விட கொடூரம் ஏதாவது இருக்க முடியமா ?

மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் அஷிம் தேப்சர்மா. இவரது மனைவிக்கு 5 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கடந்த வாரம் தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சிலிகுரி பகுதியில் உள்ள நார்த் பெங்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். சுமார் 6 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின்னருக்கும் குழந்தையின் உடல் நிலை … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் ?

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 500 கடைகளை … Read more