தமிழகத்தில் ஊடுருவும் லாட்டரி மோகம்!

தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களின் அதிர்ஷ்ட ஆசையால், தான் சம்பாதிக்கும் பணத்தை, ஏராளமான லாட்டரிகளை வாங்குவதன் மூலம் இழந்து வருகின்றனர். வியாபார நோக்கில் சிலர், கேரளா லாட்டரிகளை பெருமளவில் வாங்கி வந்து தமிழகத்தில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்று வருகின்றனர். சட்ட விரோதமாக லாட்டரி விற்று வந்த இருவரை கம்பம் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலும் கேரள மாநில எல்லைப் … Read more

மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காதது மு.க.ஸ்டாலினின் தவறுதான் – குஷ்பு பரபரப்பு பேட்டி.!!

மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காதது மு.க.ஸ்டாலினின் தவறுதான் – குஷ்பு பரபரப்பு பேட்டி.!! பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகாலம் நிறைவடைந்ததால் இதனை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்தது என்ன என்று அமித்ஷா பட்டியல் வெளியிடுவாரா? என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.  இந்த நிலையில் இன்று சென்னையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த அமித்ஷாவை வரவேற்பதற்காக நடிகை குஷ்பூ வருகை … Read more

எழும்பூர் ரயில்நிலையத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி பசுமைத் தாயகம்!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள சுமார் 200 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 11.06.2023 ஞாயிறு மதியம் சென்னை ஈ.வே.ரா சாலையில் நடத்தப்பட்டது. தென்னக இரயில்வே நிறுவனத்தின் பசுமை அழிப்பு நடவடிக்கையை கண்டித்து, ‘இனி வெட்டப்படவிருக்கும் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல், வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நட்டு வளர்த்தல், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் … Read more

அளவுக்கு அதிகமாக மாசு அடைந்த தாமிரபரணி ஆற்று நீர் – அன்புமணி இராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றுநீர் மிக மோசமாக மாசு அடைந்திருப்பதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தித் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.  சர்வதேச தர குறியீட்டுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஆற்றுநீர் பல மடங்கு மாசடைந்து உள்ளதாகவும், தாமிரபரணி நீரில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மடிந்து தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகளவில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதிக அளவில் கால்சியம் கலந்திருப்பதால், … Read more

போட்டி போட்டு போராட்டம் நடத்தும் ஆண்கள், பெண்கள் – ஈரோட்டில் நடந்தது என்ன?

போட்டி போட்டு போராட்டம் நடத்தும் ஆண்கள், பெண்கள் – ஈரோட்டில் நடந்தது என்ன? ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளைப்பாறைமேடு பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மதியம் 12 மணியளவில் மதுக்கடையை மூடக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.  இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் … Read more

திண்டுக்கல் : பழனியில் மதுபானக் கடைக்குள் புகுந்த போலீசார் – நடந்தது என்ன?

திண்டுக்கல் : பழனியில் மதுபானக் கடைக்குள் புகுந்த போலீசார் – நடந்தது என்ன? திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சுற்றுவட்டார பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பழனி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த அரசு பார்கள் செயல்படுவதற்குத் தடை விதித்து சீல் வைக்கபட்டது.  இதற்கிடையே அரசு மதுபான கடைகளில் ஒரு பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் பெறுவதாக பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவின.  இந்நிலையில் இன்று பழனி … Read more

#கடலூர் : அரசு பேருந்து – தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.! 16 பேர் படுகாயம்

கடலூர் அருகே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் விருதாச்சலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள … Read more

மீஞ்சூர் அருகே பள்ளி வளாகத்தில் வாலிபர் தற்கொலை.! போலீசார் விசாரணை…!

மீஞ்சூர் அருகே பள்ளி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இருளர் காலனி பகுதியில் வசிப்பவர் முத்து. இவரது மகன் மணிகண்டன் (19). இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன், அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த … Read more

சிவகங்கை : கிணற்றுக்குள் தவறி விழுந்து குழந்தை பலி.!!

சிவகங்கை : கிணற்றுக்குள் தவறி விழுந்து குழந்தை பலி.!! சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகில் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி கலா. இவர்களுக்கு கிஷோர் கண்ணன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வீட்டின் முற்றத்தில் கிஷோர் கண்ணனும், கலாவும் சிறிது நேரம் அமர்ந்து விளையாடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று  இரவும் இருவரும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு  பேசிக் கொண்டு இருந்தார். இவர்களது வீட்டு அருகிலேயே … Read more

குழந்தை இறந்த துக்கம்: ஸ்விட்ச் பாக்ஸில் கை வைத்த தந்தை… அரியலூரில் பரிதாபம்…!

அரியலூர் மாவட்டத்தில் குழந்தை இறந்த துக்கத்தில் தந்தை மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(26). இவரது மனைவி திவ்யா. இவர்களது குழந்தை விக்ஷன்(2). இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை விக்ஷன், கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே … Read more