இலங்கையில் பேருந்துகளில் வரும் புதிய நடைமுறை

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க, பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நெடுஞ்சாலையில் ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பயணிகள் பேருந்துகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஜி.பி.எஸ். உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  இலங்கை போக்குவரத்து சபை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் GPS வசதிகள் பொருத்தப்படும். உபகரணங்கள் நிறுவும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து … Read more

பிரான்ஸில் காணாமல் போன இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள்!

2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர். அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13 பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படை வீரர் ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. திருடப்பட்ட கடவுச்சீட்டுக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், … Read more

யாழில் தமிழரசுக் கட்சி கூட்டத்தில் மோதல்! ஒருவர் வைத்தியசாலையில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இன்றைய(13.05.2023)யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் இரண்டு நபர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய்தர்க்கமே மோதலுக்கு காரணம்  குறித்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் … Read more

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு! 22 கரட் தங்கப் பவுணின் விலையில் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக  சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி, இன்று(13) காலை ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக காணப்பட்டுள்ளது. தங்க விற்பனையாளர்களின் தகவல் நேற்று (12) 161,600 ரூபாவாக 22 கரட் தங்கப்பவுணின் விலை காணப்பட்டது. இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை தற்போது ரூ. 171,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் … Read more

இலங்கையில் தீவிர கண்காணிப்பு வலையத்திற்கு கீழ் ஹோட்டல்கள்!

சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்குகின்ற விடுதிகள் மற்றும் உணவகங்களை தீவிரமாக கண்காணிக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் தலைமையகம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள்  கொழும்பு உட்பட அனைத்து மாகாணத்திலும் எந்த வயதுடைய இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அறைகள் வழங்கப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதி உரிமையாளர்கள் அதிகமான பணத்தினை சம்பாதிக்கும் நோக்கிலேயே இவ்வாறு வயது குறைந்த சிறுமிகளுக்கும் … Read more

சீமெந்தின் விலை குறைப்பு

சீமெந்து விலை குறைக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதன்படி இன்று (13.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சீமெந்தின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை இதன்படி 50 கிலோ கிராம் எடையுடைய ஒரு மூட்டை சீமெந்து 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 2750 ரூபா என விற்பனை செய்யப்பட்ட சீமெந்து நாளை முதல் 2600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் … Read more

ஒரு தலைக் காதலால் கொல்லப்பட்ட இளம் குடும்பப் பெண்: தீவிர நடவடிக்கையில் பொலிஸார் (photos)

வவுனியா – நீலியாமோட்டைப் பகுதியில் இளம் குடும்ப பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று (13.05.2023) பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நியூட்டன் தர்சினி (வயது 26) என்ற ஒருபிள்ளையின் தாயும், சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) என்ற இளைஞனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடியன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் வீடு திரும்பிய போது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். எனவே இந்த சம்பவம் தொடர்பாக … Read more

மாணவியை காணவில்லை – காதலனை தேடும் பொலிஸார்

பெந்தோட்டை, சிங்கரூபாகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். மகள் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் இளைஞருடன் தனது மகள் காதல் உறவில் இருந்ததாகவும் தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கடந்த 10ஆம் திகதி இது குறித்து மகளை எச்சரித்ததாக அவரது தாயார் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி 2 நாட்களாக … Read more

சீனி மற்றும் கோதுமை மா விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் மாதத்திற்குள் சீனியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.   சீனி விலை இறக்குமதியாளர்களிடம் காணப்படும் சீனி கையிருப்பு தொடர்பில் ஆராயுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை இறக்குமதியாளர்கள் ஏற்றுக்கொண்டதற்கமைய, அடுத்த … Read more

பால் மா விலை குறைப்பு குறித்து வெளியான புதிய தகவல்

பால் மா விலை குறைப்பு குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உறுதியான முடிவு இல்லை இது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்கள் மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை (15.05.2023) விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  Source … Read more