Kanguva Teaser: `சிறப்பு விருந்தினர்!' கங்குவா டீசரில் இடம்பெறும் விஷயங்கள் என்னென்ன?- பரபர அப்டேட்!

மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள். ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளிவருகிறது என்பதால் தான் அந்த மகிழ்ச்சி. ‘சிறுத்தை’ சிவா, சூர்யா இருவரின் திரைப்பயணத்திலும் மைல் கல்லாக இருக்கும் எனச் சொல்லப்படுகிற ‘கங்குவா’ படத்தின் டீசரை பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ மேக்கிங்கில் மிரட்டலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 10 மொழிகளில் 3D தொழில் நுட்பத்தில் இந்தப் படம் வெளிவருவதால், படத்தின் கிராபிக்ஸ் … Read more

`உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் தேர்தலை நடத்த வேண்டும், ஏனென்றால்..!' – டெரிக் ஓ பிரையன் சொல்வதென்ன?

அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதாகவும், ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், தேர்தல் தேதி பிரதமர் மோடிக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டத் தேர்தல் தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டதால்தான் பிரதமர் மோடி அதற்கேற்றவாறு தமிழ்நாட்டு பிரசாரத்துக்கு முன்னுரிமை அளித்திருப்பதாகவும். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜக – தேர்தல் ஆணையம் மேலும், பிரதமர் மோடி எல்லா மாநிலங்களுக்கும் பிரசாரத்துக்குச் செல்லும் வகையில் தேர்தலைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி … Read more

`ஆசானுக்கு பத்ம பூஷண் கிடைக்க வேண்டாமா?’- சுரேஷ் கோபியை ஆதரிக்க கதகளி ஆசானை நிர்பந்தித்தாரா டாக்டர்?

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய கதகளி கலைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை ஆசான்கள் என அழைக்கின்றனர். கதகளியில் மிகவும் பிரசித்தி பெற்றவர் கலா மண்டலம் கோபி ஆசான். இந்த நிலையில், கலா மண்டலம் கோபி ஆசானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆதரவாக செயல்பட அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கலாமண்டலம் கோபி ஆசானின் மகன் ரகுகுரு கிருபா ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு மூலம் தெரியவந்தது.  அந்த … Read more

Purananooru: "படத்திற்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது!" – `புறநானூறு' அப்டேட் தந்த சூர்யா

`புறநானூறு’ படம் தொடர்பான அப்டேட்டை நடிகர் சூர்யா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘கங்குவா’ படம்  விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் டீசர் இன்று மாலை வெளியாகிறது. ‘கங்குவா’விற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. சூர்யாவின் 43வது படமான இதில், அவரோடு மிகவும் முக்கியமான கேரக்டர்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா இவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதாக அறிவிப்புகளும் வெளியாகின. சூர்யா, ஜி.வி. பிரகாஷ், சுதா கொங்கரா, … Read more

காங்கிரஸிடம் இருந்து திருச்சியை பெற்ற மதிமுக… வைகோ போடும் கணக்கு என்ன?!

தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியை பெற்றிருக்கிறது ம.தி.மு.க. அக்கட்சியின் முதன்மை செயலாளார் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ம.தி.மு.க திருச்சி தொகுதியை பெற்றது ஏன்? ம.தி.மு.க-வுக்கான களம் திருச்சியில் எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இரண்டு தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் ஆகிய தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு … Read more

Electoral Bonds: சிக்கிய திமுக… டார்கெட் செய்யும் அதிமுக… தாக்கத்தை ஏற்படுத்துமா?

தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நாட்டையே உலுக்கிவருகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலமாக, அதிகளவில் பயனடைந்த கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளை வைத்து மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க பணம் பெற்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற … Read more

இந்த வார ராசிபலன்: மார்ச் 19 முதல் 24 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

ஊட்டி: `ஆவின் பாலில் புழுக்கள்’ – டீக்கடைக்காரர் புகாரை மறுக்கும் நிர்வாகம், விசாரணையில் அதிகாரிகள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி, சேராங்கிராஸ் பகுதியில் உள்ள இளம்படுகர் சங்கம் கட்டடத்தில் தேநீர் கடை நடத்தி வருகிறார் சிவகுமார். வழக்கம்போல இன்று ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கிய இவர், பாலை கொதிக்க வைப்பதற்காக பாத்திரத்தில் ஊற்றியிருக்கிறார். அப்போது, ஏராளமான புழுக்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகுமார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பாலில் புழுக்கள் மூன்றில் ஒரு பங்கு உணவில் கலப்படம்! – தமிழகம் நம்பர் ஒன் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு … Read more

லிஃப்ட் கொடுப்பதாக ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை; தற்கொலைக்கு முயன்ற பெண்… ஒருவர் கைது!

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி ஏற்றிச் சென்று, பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, போர்டேஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமையன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். … Read more