பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம்

• நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் விரைவில். • இளையோரை விவசாயத்தில் ஈடுபடுத்த “ஸ்மார்ட் எக்ரிகல்சர்” அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி. நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பயிர்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, போட்டித் தன்மைமிக்க விவசாயக் கைத்தொழில் துறையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் … Read more

பிஜி தீவின் கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சர் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த பிஜி தீவின் கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சர் கலவெடி வோடோ ராவோ (Kalaveti Vodo Ravu) அவர்கள் 2024.02.21 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது பிஜி அமைச்சர் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் … Read more

தாய்லாந்துக் குழுவின் நிதி அன்பளிப்பை “கண்ணீரைத் துடைப்போம்” திட்டத்துக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து 50,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்தனர். இந்த அன்பளிப்புத் தொகையை மிகவும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி நிதியம் முன்னெடுத்துள்ள “கண்ணீரைத் துடைப்போம்” வேலைத் திட்டத்திற்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்தார். இந்தக் குழு இலங்கையின் நலன்புரிச் செயற்பாடுகளுக்காக மூன்றாவது முறையாக இவ்வாறான அன்பளிப்பை … Read more

அரச தொழிற்சாலைகள் இரண்டில் உற்பத்தி செய்யப்படும் உரம் தேயிலை தொழில்துறையினருக்கு சந்தை விலையை விட குறைவாக வழங்கப்படும்

“Agri tech-24 விவசாய தொழில்நுட்ப அறிவு” கண்காட்சி நாளை ஹம்பாந்தோட்டை படஅத விவசாய தொழில்நுட்ப பூங்காவில் – விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர. அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு … Read more

ரொனி டி மெல் உடனான எனது அனுபவம் எனது அரசியல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது

ஜே.ஆர்.ஜயவர்தன – ரொனி டி மெல் இணக்கப்பாட்டுடன் கொண்டுவந்த திறந்தப் பொருளாதார கொள்கை நாட்டை முன்னேற்றியது – ரொனி டி மெலுக்கு இறுதிக்கிரியை நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. திறமையான அரசியல்வாதியும் சிறந்தப் பொருளாதார நிபுணருமான முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம், தனது தற்கால அரசியல் செயற்பாடுகளுக்கு உக்கமளிப்பதாக அமைந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சரியானத் தீர்மானங்களை எடுத்து அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தி முடிவுகளைப் பெறுவதே ரொனி டி மெல்லின் இயல்பாகும். … Read more

வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடி விடாது தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பாக ஆய்வு!!

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடிவிடாது அரச மற்றும் தனியாரின் ஒத்துழைப்புடன் கூட்டு வர்த்தகமாக தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கான அவசியம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய வர்த்தக மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தேசிய கடதாசி சங்கத்தினை 2013, 2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை கடந்த (20) ஆம் திகதி தேசிய பொருளாதார மற்றும் உள்ளக திட்டமிடல் தொடர்பான மேற்பார்வை குழுவின் … Read more

மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தானியங்கிப் பொறிமுறை மற்றும் இணையத்தளம்

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதற்கான இறுதிக்கட்டத்தில் காணப்படுவதாகவும், அதற்கிணங்க மார்ச் நான்காம் திகதி முதல் நாடு பூராகவும் உள்ள மோட்டார் வாகானப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருகை தரும் சகல சேவை பெருநர்களுக்கு வினைத்திறனான உடனடி சேவைகளை வழங்குவதற்காக முன்கூட்டியே தினமும் நேரமும் பெறக்கூடியதாக தானியங்கி அழைப்புப் பொறிமுறையொன்று மற்றும் இணையத்தளம் என்பவற்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக (29) அறிவித்தார். இதன் ஊடாக … Read more

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ஆளுநர் செயலாளர் எல். பி. மதநாயக்க உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட இடமளியோம்

இலங்கை கடல் பிராந்தியம் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கடற்படையைச் சார்ந்துள்ளது. செங்கடலின் பாதுகாப்புக்கு முயற்சிகளுக்கு ஒத்துழைத்து இந்நாட்டு துறைமுகங்களின் பெறுமதியைப் பாதுகாக்க வேண்டும் – இலங்கைக் கடற்படையின் விசேட கப்பல் படையணிக்கு ‘ஜனாதிபதி வர்ணங்கள்’ வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் … Read more

பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவனுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து.

பாக்குநீரினையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப்பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது. சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணி, 15 நிமிடத்தில் குறித்த சாதனையினை தன்வந்த் படைத்துள்ளார். இச்சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார். இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் … Read more