செயற்றிட்டங்களின் வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பயனாளிகளும் அக்கறை செலுத்த வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினம் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  வலியுறுத்தியுள்ளார். அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படும் போதுதான் வழங்கப்படும் திட்டங்கள் அல்லது அபிவிருத்திகள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்கும் முழுமையான இலக்கை அடையும் என்றும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27-03-2024) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்தார். அண்மையில் … Read more

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்துரையாடல்!

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கலந்துரையாடல் நடாத்தினர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் ஆளுநரிடம் இணக்கம் வெளியிட்டனர்.

தற்போதைய பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளில் பங்கேற்று தாய்நாட்டிற்கு வளம் சேர்க்க முன்வாருங்கள். – புலம்பெயர் இலங்கையர்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்.

தமது தொழில்சார் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், அந்தந்த துறைகளில் உள்ள புதிய முறைமைகளைப் பின்பற்றுவதன் மூலமும் தாய்நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை புலம்பெயர் சமூகத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2024.03.25 ஆந் திகதி இடம்பெற்ற சீனாவில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் உள்ள … Read more

சீனா – இலங்கை ஒத்துழைப்பில் 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதமர் இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சீன இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக, … Read more

சோளச் செய்கைக்கான விதைகளைத் தயாரிக்கும் மத்திய நிலையம் வவுனியா நெலுக்குளத்தில் திறந்து வைப்பு

நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான சோளச் செய்கை;கான விதைகளைத் தயாரிப்பிற்கு 390 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்பட்ட சோள விதைகளைத்  தயாரிக்கும் மத்திய நிலையம் வவுனியா நெலுக்குளத்தில்  விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்   அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் திறந்து (23) வைக்கப்பட்டது. விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது இம்மத்திய நிலையத்திற்கு அவசியமான 390மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு விவசாய அமைச்சின் விவசாய நவீன மயப்படுத்தல் திட்டத்தினால் … Read more

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் நெடுஞ்சாலைகள் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைத்தல்

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் நெடுஞ்சாலைகள் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைப்பதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் தான்; சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சரவைக் … Read more

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை அனுமதி..

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்… இருநூற்றுப்பத்து (210) இயைபு முறைக் குறியீடுகளின் (HS Code) கீழ் வகைப்படுத்தல்களுக்கான 64 பொருட்களை இறக்குமதி செய்யும் போது வசதியளிப்பதற்காக தனிக்கூட்டு வரி அறவீட்டுக்காக 2007 ஆம் ஆண்டின் … Read more

தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய குறைந்தபட்ச வேதனம் 12,500/- ஆக விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் விதந்துரைகளின் பிரகாரம் நியமிக்கபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் தருநர்களையும் உட்சேர்த்து முத்தரப்பு உபகுழுவொன்றின் … Read more

தேங்காய் தண்ணீர்  ஏற்றுமதியினால் பெப்ரவரி மாதத்தில் 3,439 மில்லியன் ரூபா வருமானம்

நாட்டில் தேங்காய் தண்ணீர் ஏற்றுமதியினால் 2024 பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 3,439 மில்லியன் ரூபா வருமானம்  கிடைக்கப்பெற்றுள்ளது.   தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் பிரகாரம் கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில்  தேங்காய் தண்ணீர் ஏற்றுமதியினால் 2,705மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் 734 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தில் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்தார். விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் … Read more

சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் நடாத்துகின்ற சர்வதேச மாநாடு இவ்வாண்டு இலங்கையில்

சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் ஆண்டுதோறும் நடாத்துகின்ற சர்வதேச மாநாட்டை இவ்வாண்டு (2024) இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு  அமைவாக இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக  நேற்று (25.03.2024) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:05. சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் ஆண்டுதோறும் நடாத்துகின்ற சர்வதேச மாநாட்டை 2024 இல் இலங்கையில் நடாத்துதல் உலகில் மிளகு உற்பத்தி செய்கின்ற பிரதான நாடுகள் இணைந்து … Read more