நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் மாற்றம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ … Read more

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பணிக்குழு மட்டத்திலான இணக்கம்

• இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தில் சாதகமான முன்னேற்றம். • பணவீக்கத்தை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. • அரச நிதி மறுசீரமைப்பின் பின்னர் அரச நிதி நிர்வாகம் வலுவடைந்துள்ளது. • 2024 பெப்ரவரியில் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5 டொலர் பில்லியன்களாக உயர்வு. • தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு வருமானத்தை அதிகரித்துகொள்ள வேண்டியது அவசியம். சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து; தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக முதலிடம்: இலங்கை 128 ஆவது இடத்தில்….

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தனி நபர் வாழ்க்கைத் திருப்தி,  மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்காக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் 7 ஆவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. . அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் … Read more

சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் – சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன்  சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டதானது, அரசியல் அமைப்பையும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் சட்டத்தையும் மீறியிருப்பதாகவும், உயர் … Read more

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்களுடன் ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை … Read more

காங்கேசந்துறைத் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 61.5 மில்லியன் டொலர் உதவி

இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காங்கேசந்துறைத் துறைமுகத்தின் பூரண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 61.5மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் இந்தியாவிற்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். உயர் ஸ்தானிகருக்கும்  துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  விற்கும் இடையே அண்மையில் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் உட்பகுதியில் பாரிய கப்பல்கள் மற்றும்  நங்கூரமிடுவதற்கு … Read more

கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு அவ்வப்போது 35-40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் … Read more

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்தார். விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரையும் பாதுகாக்கும் முறைமையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக் கூடும்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more

பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய பாடநெறியைப் பூர்த்திசெய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இலங்கை பாராளுமன்றத்தினால் நடத்தப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய குறுகியகால பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஓலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் பிரதம அதிதியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர கலந்து கொண்டதுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. ரமீஸ் உள்ளிட்ட … Read more