இலங்கைக்கான கிர்கிஸ் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான கிர்கிஸ் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. அஸ்கர் பெஷிமோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கிர்கிஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார்.     வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.

இலங்கைக்கான துர்க்மெனிஸ்தான் உயர்ஸ்தானிகரின் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான துர்க்மெனிஸ்தானின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஷலார் கெல்டினாசரோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் துர்க்மெனிஸ்தான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார்.   வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.

குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் ஜனாதிபதி செயலகத்தில்

குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் 2024.01.30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய சமன் ஏக்கநாயக்க, தற்போது ஜனாதிபதி செயலகமாக இருக்கும் பழைய பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து இவ்வாறான இளம் தலைமைத்துவம் உருவாகும் என … Read more

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர். இன்று நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு, 01- மென்சி சிபோ டிலாமினி – எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர்Mr. Menzie Sipho Dlamini High Commissioner of the Kingdom of Eswatini) … Read more

இலங்கையில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கான முயற்சிகளுடன் பேண்தகு வர்த்தக ஊக்குவிப்பு மூலோபாயங்கள் முன்னெடுக்கப்படும். – பிரதமர் தினேஷ் குணவர்தன

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (ESCAP) இலங்கைக்கு முழுமையாக ஆதரவளிக்கும். – ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் அர்மிடா அலிஸ்ஜாபானா, இலங்கையில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கான பேண்தகு வர்த்தக ஊக்குவிப்புக்கான மூலோபாயங்கள் (2024.01.31) பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (ESCAP) நிறைவேற்றுப் … Read more

அரச சேவையில் சேவை நெருக்கடி தீர்வு பொறிமுறையை அறிமுகப்படுத்த சர்வதேச தொழிலாளர் தாபனம் உதவி…

அரசாங்க சேவையில் தொழில் உரிமைகள் தொடர்பான நெருக்கடி நிலைகளுக்கான தீர்வு மற்றும் தடுப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் தாபனத்திடம் (ILO) கோரிக்கை விடுத்தார். சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் (ILO) வதிவிடப் பணிப்பாளர் ஜோனி சிம்சன் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஆகியோரை நேற்று (2024.02.01) அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், முன்மொழிவுக்கும் … Read more

76வது தேசிய சுதந்திர தின விழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (ஜன.31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலி … Read more

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கான அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (02) வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் பற்றிய தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் https://moe.gov.lk/ பெற்றுக்கொள்ள முடியும். மேலும், மாணவர்களின் புள்ளி மட்டங்களுக்கு அமைய, அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பரிசீலிக்க முடியும்

இலங்கை பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இலங்கைப் பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பாராளுமன்றத்தின் 6வது படைக்கச் சேவிதராக கடமையாற்றிய நரேந்திர பெர்னாந்து அவர்கள் (30) ஓய்வுபெற்ற நிலையில், 07வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வுபெற்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் புதிய படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு (30) முற்பகல் பாராளுமன்ற … Read more