அரண்மனை 4ல் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் குஷ்பு, சிம்ரன்!

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர். சி. இதில் அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இதற்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் இந்த படத்திற்காக 'துள்ளல்' என்கிற … Read more

என்னது டிஸ்கஷன் மட்டும் 2 வருடங்களா?.. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் ரகசியத்தை சொன்ன தயாரிப்பாளர்

சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டிதான் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்

சுந்தர்.சி தொடர்ந்து பேய் படங்களை இயக்க காரணம் என்ன? குஷ்பு சொன்ன பதில்..

Aranmanai 4 Trailer Launch Event : சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. 

மீண்டும் இணைந்த தசரா படக் கூட்டணி!

அறிமுக இயக்குனர் ஸ்ரீ காந்த் ஓடிலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'தசரா'. இந்த படம் நானிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அமைந்தது. கடந்த சில மாதங்களாக மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அது உறுதியாகியுள்ளது. இன்று தசரா படம் வெளிவந்து ஒரு ஆண்டு ஆனதை முன்னிட்டு நானி, ஸ்ரீ காந்த் ஓடிலா கூட்டணியில் நானியின் 33வது படம் … Read more

அய்யோ கார் எல்லாம் வேண்டாம்.. கொட்டும் மழையில் ஸ்கூட்டரில் சென்ற ரஜினி.. ஏன் தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171

குறும்பட இயக்குனருடன் இணையும் நயன்தாரா!

தமிழில் இமைக்கா நொடிகள், யானை, காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் போன்ற படங்களைக் தயாரித்த நிறுவனம் ட்ரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றது. அதன்படி, இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். இதனை குறும்பட இயக்குனர் சதீஷ் இயக்குகிறார் .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மகனை பறிகொடுத்த டேனியல் பாலாஜி அம்மா.. ஆறுதல் சொல்லி தேற்றிய முரளியின் மனைவி.. கூடவே அதர்வா!

சென்னை: பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். கெளதம் மேனன், வெற்றிமாறன், விஜய்சேதுபதி, அமீர், பவன், அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகைகள் ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர்

இளம் இயக்குனர் உடன் இணைந்த அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மிஷன் சாப்டர் 1' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் 'என்னங்க சார் உங்க சட்டம்' என்கிற படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருண் விஜய் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

முதுகில் குத்திய ஹீரோ.. வலியை வெளியில் காட்டிக்கொள்ளாத டேனியல்.. பிரபலம் பகிர்ந்த வேதனை!

சென்னை: வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 48 வயதே ஆன அவரது மரணம் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், செய்யாறு பாலு அவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்!

துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தது மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இதையடுத்து தமிழில் 'அஞ்சான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தியில் குறிப்பிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி … Read more