ரூ.51,000: உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு, மருமகனுக்கே மகளை மணமுடித்த பெற்றோர் – உ.பி அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் திருமண உதவித்தொகையாக `விவஹேது’ என்ற திட்டத்தின் மூலம் ரூ.51,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.35,000 நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கும், சீர்வரிசைக்காக ரூ.10,000, மண விழாவிற்காக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பல்லியா மாவட்டத்தில் 200 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. யோகி ஆதித்யநாத் அதில் ஏற்கெனவே திருமணமானவர்கள், பணத்துக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்டது, போலியாக திருமணம் செய்துகொண்டது, சம்பந்தமில்லாதவரைக்கூட ஒப்பந்த அடிப்படையில் மணமகளாக, மணமகனாக அழைத்துவரப்பட்டது என பல்வேறு மோசடிகள் நடந்தன. … Read more