பிரதமர் மோடி 'மேட்ச்-பிக்சிங்' செய்வதாக கருத்து: ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்
புதுடெல்லி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ”பிரதமர் மோடி ‘மேட்ச்-பிக்சிங்’ செய்து தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார். தேர்தல் கமிஷனில் தனது ஆட்களை மத்திய அரசு நியமித்து விட்டது. எனவே, இந்த தேர்தல், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மேட்சாக உள்ளது” என்று கூறினார். இந்நிலையில், இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் பா.ஜனதா நேற்று புகார் அளித்தது. மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி, பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்குமார் … Read more