ஜாஃபர் சாதிக் கொடுத்த வாக்குமூலம்… பல உண்மைகள் வெளியாகும்: என்சிபி அதிகாரி பரபரப்பு ப்ரெஸ் மீட்

Jaffer Sadiq Arrested: ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜாஃபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுஷ்மாவின் மகள், பாஜக வழக்கறிஞர்… யார் இந்த பன்சூரி ஸ்வராஜ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: தேர்தல்களில் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்று புதுமுக வேட்பாளர்கள் குறித்த மக்களின் பார்வை. மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனத்துக்குரிய புதுமுகங்களைப் பற்றி ஒவ்வொருவராகப் பார்ப்போம். அந்த வகையில் இந்த அத்தியாயம் நாம் கவனிக்க இருப்பது, பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ். இவரின் பின்புலம் குறித்து பார்ப்போம். சமீப காலமாக பாஜக தனது அடிமட்ட ஊழியர்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு வெகுமதி அளித்து வருவதாக கூறிக் … Read more

ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம் தொடக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை டெல்லி முதல்வரும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் தேதி மார்ச் 13-ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், … Read more

Sela Tunnel: 13,000 அடி உயரத்தில் உலகின் மிக நீள இருவழி சுரங்கப்பாதை… திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Sela Tunnel In Arunachal Pradesh: அருணாச்சலத்தில், சுமார் 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான இருவழிப்பாதை திட்டமான சேலா சுரங்கப்பாதையை  பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அதிகாலை பயணம்… – காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி யானை சவாரி

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை, அவர் காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார். அங்கு சென்ற பிரதமர் மோடி பூங்காவை சுற்றிப் … Read more

தேர்தல் வாக்குறுதியாக ராகுல் காந்தி 5 உத்தரவாதம்: ப.சிதம்பரம் விவரிப்பு

“ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விவரித்துள்ளார். இது குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியது: “ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சி பெறுவோரை நியமித்துக் கொள்ளலாம் என்று சட்டம் உள்ளது. … Read more

மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி மீட்பு

தவ்பால்: மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ராணுவ இளநிலை அதிகாரி கொன்சம் கேடா சிங் மீட்கப்பட்டுள்ளார். உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து ராணுவ அதிகாரியை பாதுபாப்புப் படை அதிகாரிகள் மீட்டனர். மணிப்பூரில் கடந்தாண்டு மேமாதம் இனக் கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காண, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோன்சம் கேடா சிங் என்ற அந்த அதிகாரி … Read more

வயநாடில் போட்டியிடும் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியில் பதற்றம்: காரணம் என்ன?

Congress Candidates List: ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட எடுத்திருக்கும் முடிவு இந்தியா கூட்டணிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பெண்ணின் பாதம் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி

டெல்லியில் சிறந்த கதை சொல்லிபிரிவுக்கான விருது பெறுவதற்காக தமிழ்நாட்டை சேர்ந்தகீர்த்திகா கோவிந்தசாமி மேடைஏறியதும் பிரதமர் மோடியின் பாதத்தை தொட்டு வணங்கினார். அப்போது பிரதமர் மோடி, காலில் விழக்கூடாது என்றுஅறிவுறுத்தினார். அதேநேரம் கீர்த்திகாவின் பாதத்தை அவர் 3 முறை தொட்டு வணங்கினார். பின்னர் விழா மேடையில் இருவரின் உரையாடல் விவரம்: பிரதமர் மோடி: நாட்டில் பாதங்களை தொட்டு வணங்குவது பாரம்பரியாக இருக்கிறது. கலைத் துறையில் ஒருவர் காலில் விழும்போது, அதன் உணர்வு வேறுபட்டதாக இருக்கும். ஒரு மகள் (கீர்த்திகா … Read more

சென்னையை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி உட்பட 23 பேருக்கு தேசிய படைப்பாளி விருது: பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: நாடு முழுவதும் 23 பேருக்கு தேசிய படைப்பாளி விருதினை பிரதமர் மோடி வழங்கினார். மத்திய அரசு சார்பில் அண்மையில் தேசிய படைப்பாளி விருது உருவாக்கப்பட்டது. இந்த விருதுக்காக கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நாடு முழுவதும் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. மொத்தம் 1.5 லட்சம் பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவர்கள் தொடர்பாக ஆன்லைன் வாயிலாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டன. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கருத்துகளை பதிவு செய்தனர். இவற்றின்அடிப்படையில் … Read more