குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல்: ரூ.17,373 கோடியில் 36 திட்டங்கள் தொடங்கினார் மோடி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ரூ.17,373 கோடி மதிப்பிலான 36 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் மத்திய அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுதல் மற்றும் நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, ரூ.17,373 கோடி மதிப்பிலான 18 திட்டங்களை தொடங்கி வைத்தார். 15 புதிய திட்டங்களுக்கு … Read more