அமெரிக்காவில் வள்ளுவர் தெரு உதயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க வடக்கு வர்ஜீனியா பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் வள்ளுவன் தமிழ் மையத்தின் முயற்சியால் இது நடந்துள்ளது.திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. திருக்குறள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சியும் நடந்துள்ளன. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகப் புகழ் உண்டு.

தற்போது திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “அமெரிக்க மண்ணில் முதல்முறையாக வெர்ஜினியா மாநிலத்தில் பேர்பேக்ஸ் மாகாணத்தில் வள்ளுவர் தெரு” உருவாகியுள்ளதாக வள்ளுவன் தமிழ் மையம் தெரிவித்துள்ளது.

latest tamil news

இதுகுறித்து வெர்ஜினியா மாநில அவை உறுப்பினர் டெல் டான் ஹெல்மர் ட்விட்டரில், “தமிழ் சமூக உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். புகழ்பெற்ற கவிஞர் வள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் முதல்முறையாக வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தெரு ஆங்கிலத்தில் ‘Valluvar Way’ எனவும், தமிழில் வள்ளுவர் தெரு எனவும் அழைக்கப்படும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.