ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன்! திட்டவட்டமாக கூறிய நடிகர் தனுஷ்.. சோகத்தில் குடும்பத்தார்கள்


நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.

இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதனையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் ஐஸ்வர்யா தனது தந்தையிடம் போன் செய்து நலம் விசாரித்த போது ரஜினி மிகக்கடுமையாக அவரிடம் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது அப்பாவிற்காக மனமிறங்கிய ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ்வது தொடர்பாக கஸ்தூரிராஜாவிடம் பேசியுள்ளார். இதுதொடர்பாக கஸ்தூரி ராஜா தனது மகன் தனுஷிடம் சமாதானம் பேசியுள்ளார்.

இந்நிலையில் கஸ்தூரிராஜா ஐஸ்வர்யாவிடம் இருவரும் உங்களது குழந்தைகளுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று வாருங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் கஸ்தூரிராஜா செய்துள்ளார்.

இதனை அறிந்த தனுஷ் யாரை கேட்டு இந்த பயணத்தை முடிவு செய்தீர்கள் என்று தனது தந்தையிடம் மிகக்கடுமையாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு ஐஸ்வர்யாவுடன் வாழ துளிகூட விருப்பமில்லை என்று கூறியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகின்றது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.