பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 36 நாட்களில் 13 என்கவுண்டர்கள்- 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை <!– பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 36 நாட்களில் 13 எ… –>

ஜம்மு காஷ்மீரில் கடந்த 36 நாட்களாக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாலை ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் அங்கு பதுங்கியைருந்த 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். அவர்களுள் இக்லாக் அகமது (Ikhlaaq Ahmad) என்பவன் கடந்த மாத இறுதியில் போலிஸ் ஹெட் கான்ஸ்டாபிள் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தான்.

36 நாட்களில் 13 என்கவுண்டர்களில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 24 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். இது தவிர 10 பயங்கரவாதிகளையும், அவர்களது கூட்டாளிகள் 17 பேரையும் கைது செய்துள்ளனர். இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.