வரும் 2026 ஆம் வருடம் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் :  மத்திய அமைச்சர்

டில்லி

ரும் 2026 ஆம் வருடம் அக்டோபர் மாதம் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் என் மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனை பணிகள் வெறும் சுற்றுச் சுவருடன் நிறைவு பெற்றுள்ளது.   இது சமீபத்திய தமிழக சட்டசபைத் தேர்தலில் பேச்சுப் பொருளாக விளங்கியது.    இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தோல்விக்கு இதுவும்  ஒரு காரணம் என கூறப்பட்டது.  இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலாக மத்திய சுகாதார அமைச்சர்  மன்சுக் மாண்டவியா. “இந்தியா முழுவதும் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.  கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் 17இல்  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிறகு 2019 ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

சுமார் 11 மாதங்கள் கழித்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25அன்று ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் மார்ச் மாதம் வருடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பான் அரசுடன் கடன் உதவி பெறுவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடன் உதவி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.  இந்த  பணிகள் 2026ஆம் வருடம் அக்டோபருக்குள் முடிவடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.