2.30 லட்சம் பேர் நலம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,30,814 பேர் நலம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,20,80,664 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,30,814 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,02,47,902 ஆனது. தற்போது 13,31,648 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 1,059 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,01,114 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 1,68,98,17,199டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.