அரசு ஊழியர்களுக்கு செம செக் – அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்து உள்ளார்.

ஒமைக்ரான் தொற்று காரணமாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், மத்திய அரசு அலுவலகங்களில், ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என, மத்திய அரசு அறிவித்தது.

மேலும், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளி
அரசு ஊழியர்கள்
, அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து, இந்த நடைமுறை வரும் 15 ஆம் தேதி வரைந நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நாளை முதல், மத்திய அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் நாளை முதல் மத்திய அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தவறாமல் அலுவலகம் வர வேண்டும். அலுவலகங்களில் எப்போதும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.