ஆந்திராவில் சாலை விபத்து: கார் மீது லாரி மோதியதில் 8 பேர் பலி

ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக வந்த இன்னோவா கார் மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலுயே உயிரிழந்தனர். 

ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உருவகொண்டா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.