உக்ரைன் எல்லை பகுதியில் 70 சதவீத ரஷ்ய வீரர்கள்| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைன் எல்லைப் பகுதியில் 70 சதவீத ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை அடுத்து உக்ரைன் எல்லையில் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது.

பின், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ராணுவ வீரர்களையும், போர்க் கப்பல்கள் மற்றும்போர் விமானங்களையும்அனுப்பி வைத்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தின் 70 சதவீத ராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் வாரங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவுடன், உக்ரைன் மீது ரஷ்ய வீரர்கள் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.