கூடுதல் பாதுகாப்பை ஓவைசி ஏற்க வேண்டும்: அமித்ஷா| Dinamalar

புதுடில்லி: ஐதராபாத் முஸ்லிம் அமைப்பின் எம்பி ஓவைசி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார்.

அமித்ஷா பேசியதாவது:
எம்பி ஓவைசி நிகழ்ச்சிக்கு செல்லும் போது பயண விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் உரிய பாதுகாப்பு அளிக்க இயலாமல் போனது. சம்பவம் நடந்த இடத்தில் 3 புல்லட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

latest tamil news

எம்பி ஓவைசி பாதுகாப்பை நாங்கள் அதிகரிக்க முடிவு செய்தோம். ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார். பாதுகாப்பை ஓவைசி ஏற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.