லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்; பார்லி.,யில் மவுன அஞ்சலி| Dinamalar

புதுடில்லி: மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பார்லியின் இரு அவையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, எம்.பி.,க்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் நேற்று (பிப்.,6) காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பார்லியின் இரு அவைகளிலும் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ராஜ்யசபா கூடியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் குறிப்பை வாசித்தார்.

‛லதா மங்கேஷ்கரின் மறைவால், இந்திய இசை மற்றும் திரைப்பட உலகில் ஒரு பழம்பெரும் பின்னணிப் பாடகியையும், மனிதநேயமிக்க மனிதரையும், உயர்ந்த ஆளுமையையும் நாடு இழந்துவிட்டது. அவரது மறைவால் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இசை உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது’ என வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். அப்போது, எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.