லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல்.. ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு <!– லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும… –>

லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை அவைத் தலைவர் வெங்கைய நாயுடு வாசித்தார். அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தியதை அடுத்து, ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு இரங்கல் குறிப்பை வாசித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் மாநிலங்களவையில் 1999 முதல் 2005 வரை நியமன உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.