உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்| Dinamalar

பெங்களூரு-”உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.பி.பாட்டீலுக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.பர்தா விவாதத்தை கர்நாடக அரசே உருவாக்கியதாக, எம்.பி.பாட்டீல் குற்றம் சாட்டினார். இவருக்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., நேற்று கூறியதாவது:நீங்கள் காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவர் என்பதால், பரபரப்பாக இருக்கும் நோக்கில், உரையாற்ற சரக்கு தேடாதீர்கள்.சீருடை கட்டுப்பாடு குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு முன், உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை தெளிவுபடுத்துங்கள்.கோவாவில் காங்கிரஸ் அரசு, ஆட்சிக்கு வந்தால் மகதாயி விவாதத்தை, பேச்சு நடத்தி தீர்வு காண்பதாக கூறியுள்ளீர்கள்.அரசியல் நோக்கில் பேசுவதை விட்டு விட்டு, கோவா காங்கிரஸ் தலைவர்களை, இது போன்று கூற வைக்க முடியுமா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.