ஐ.பி.எல் 2022 : அகமதாபாத் அணியின் பெயர் வெளியானது..?

இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். 15-வது தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால்  ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் லக்னோ அணிக்கு  லக்னோ  சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.லக்னோ அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.

இந்நிலையில், மற்றொரு அணியான அகமதாபாத், தனது அணியின் பெயரை அகமதாபாத் டைட்டன்ஸ்  என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.