சென்னையைச் சேர்ந்த எனக்கு சிஎஸ்கே வில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு  : தினேஷ் கார்த்திக்

சென்னை

தாம் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்  என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது . இந்த ஏலத்தில் மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், கிளாசிக் பவுலர்கள், மாஸான ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், இளம் வீரர்கள் என பலர் இந்த ஏலத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் தினேஷ் கார்த்திக் ஒருவர்ஆவார். இவர் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து எதிர்வரும் சீசனில் விளையாட வேண்டுமென விரும்புவதாகச் சொல்லியுள்ளார். இதே கருத்தை அவர் இதற்கு முன்பும் சொல்லி இருந்தார்.  தமிழகத்தைச் சேர்ந்த அவர் டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூர், குஜராத், கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

தினேஷ் கார்த்திக் ”நான் சென்னையைச் சேர்ந்தவன்.  எனவே வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். அது நம் கையில் இல்லை என்பதால் எந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த அணிக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நான் வரவுள்ள சீசனுக்காக தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.