இந்தியாவிடம் இருந்து 3 லட்சம் டன் அரிசி வாங்க இலங்கை அரசு திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, இலங்கை வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கில்மா தகநாயக்க கூறியதாவது: இலங்கையில் அரிசி விலை கடும் உச்சத்தில் இருக்கிறது. மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன், மியான்மரில் இருந்து ஒரு லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

latest tamil news

மே மாதம் வரை இந்த இறக்குமதி நடக்கும். ஒரு நபருக்கு ஆண்டுக்கு 105 கிலோ அரிசி தேவைப்படுகிறது. நாட்டின் ஓராண்டுக்கான அரிசி தேவை 20 லட்சம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.