இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் <!– இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வ… –>

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதை அடுத்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் சேது விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.