குழந்தை திருமணம் – மனமுடைந்து விஷம் அருந்திய சிறுமி உயிரிழப்பு..! <!– குழந்தை திருமணம் – மனமுடைந்து விஷம் அருந்திய சிறுமி உயிரி… –>

திருவாரூர் அருகே குழந்தை திருமணத்தால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற 11-ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

4 ஆண்டுகளுக்கு முன்,சிறுமி 13 வயதாக இருந்த போது ஆண்டிகுப்பத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சிறுமியின் பெற்றோர் மணமுடித்து கொடுத்துள்ளனர். உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, கணவன் வீட்டாருக்குத் தெரியாமல் சொந்த ஊருக்கு ஓடிவந்திருக்கிறார்.

தற்போது மீண்டும் வந்து குடும்பம் நடத்துமாறு சிவக்குமார் வீட்டார் சிறுமியை வற்புறுத்தத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மனம் நொந்து போன சிறுமி, கடந்த வியாழக்கிழமையன்று குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில், இரு குடும்பத்தினரைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதுடன், சிவகுமார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.