சுகாதாரம் முதல் சுற்றுச்சூழல் வரை மக்களுடன் இணைந்துள்ள காமிக்ஸ்| Dinamalar

பெல்பாஸ்ட்:சுகாதாரம் முதல் சுற்றுச்சூழல் வரை, ‘காமிக்ஸ்’ மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.காமிக்ஸ் எனப்படும், சித்திரங்கள் வாயிலாக கதைகளை காட்சிப்படுத்தும் முறை, உலகம் முழுதும் மிகவும் பிரபலம்.
பாரம்பரியமிக்க இந்த காமிக்ஸ், 1920ம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பின், 1960களில், சூப்பர் ஹீரோக்கள் வலம் வந்த கற்பனை கதைகள் வாயிலாக, காமிக்ஸ் புதிய பரிமாணத்தை பெற்றது.தற்போது, இந்த காமிக்ஸ் வாயிலாக பல்வேறு தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. உடல்நலன் சார்ந்த தகவல்கள், காமிக்ஸ் வடிவத்தில் அனைவரிடமும் சென்றடைகிறது. இது, ‘மெடிக்கல் காமிக்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், அதில் இருந்து பாதுகாப்பாக இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு விளக்க, காமிக்ஸ் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதேபோல், சுற்றுச்சுழல் சார்ந்த விஷயங்களை மாணவ – மாணவியரிடம் கொண்டு செல்லவும் காமிக்ஸ் பயன்படுகிறது. இது, ‘இகோ காமிக்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கழிவுகளை அப்புறப் படுத்தும் வழிகள் ஆகியவை குறித்து மக்களுக்கு விளக்க, காமிக்ஸ் உபயோகிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.