சென்னை டூ திருப்பதி… போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் வரப்போகுது விடியல்!

நாட்டின் சாலை போக்குவரத்தில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கிய பங்கு பெறுகின்றன.

இந்த சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டே இந்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
(
NHAI
) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன்படி சென்னை – திருப்பதி இடையிலான, தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் வாகனங்களின் போக்குவரத்தை கவனத்தி்ல் கொண்டு, இந்த சாலையை, 20 கிலோமீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

பிப்.,14ஆம் தேதி விடுமுறை: மாநில அரசு அறிவிப்பு!

அதாவது, சென்னை பாடி முதல் திருப்பாச்சூர் வரை இச்சாஸையை விரிவாக்கம் செய்து, திருவள்ளூர் புறவழிச்சாலை வரை மேம்படுத்த நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திட்டம் பரிசீலனையில் இருந்து வந்தாலும், ஆணையம் உரிய நிதி ஒதுக்காததால் இதுநாள்வரை திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருந்து வந்தது.

தற்போது திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக 360 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, திருநின்றவூர் முதல் திருப்பாச்சூர் வரை, 20 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகளை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணிகளை ஆணையம் துவக்கியுள்ளது.

பின்னோக்கி நகர்த்தப்பட்ட பிரமாண்ட கோயில் கோபுரம்… ஆந்திராவில் நிகழ்ந்த அதிசயம்!

இந்த பணியை விரைவாக முடித்து, கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருவமழைகாலம் துவங்குவதற்கு முன் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.