பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு <!– பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு –>

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சியோன்புரத்தைச் சேர்ந்த செல்வ ஜெயசிங் – தங்கம் தம்பதி, கடந்த திங்கட்கிழமை இரவு தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவத்தன்று செல்வ ஜெயசிங் தனது தம்பிக்கு போன் செய்து, “மகன்கள் தங்களை சரிவர கவனிக்கவில்லை, எனவே தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” எனக் கூறியது விசாரணையில் தெரியவந்தது.

தம்பதியின் இளைய மகன் ஏசு ஜெபினை பிடித்து விசாரிக்கையில், தனக்கு திருமணம் செய்துவைக்கக் கேட்டு, தினமும் குடித்துவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்துவந்ததை அவன் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து ஏசு ஜெபின் மீது பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.