விண்ணை முட்டும் அரிசி விலை… இலங்கை அரசு எடுத்த அதிரடி முடிவு!

இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள பல்வேறு உலக நாடுகளிடம் இருந்தும் உதவிகளை
இலங்கை அரசு
கேட்டு பெற்று வருகிறது.

இந்தியா பல்வேறு பொருளாதார மற்றும் பொருள் உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிடம் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் லீவு… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரிசி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் அரிசி கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த இறக்குமதி முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்று மியான்மரில் இருந்தும் ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதியை இலங்கை இறக்குமதி செய்ய உள்ளது.

உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசுக்கு 6,700 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது என்பதும், 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை இலங்கைக்கு வழங்க ஐஓசி நிறுவனம் ஒப்புகொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.