#BREAKING || தமிழகம் : பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைப்பு.!

மதுரை அருகே பாஜக பெண் வேட்பாளரின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. 

வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தற்போது வேட்பாளர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், மதுரை அருகே பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

மதுரை கொடைரோடு பகுதியின் தொழிலதிபரான கருப்புசாமி என்பவரின் மனைவி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இவர் வாக்கு சேகரிக்க சென்றபோது,  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில மர்ம நபர்கள் பாஜக பெண் வேட்பாளர் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதில் அவர் மண்டையில் காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


 

பாஜக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வேட்பாளரின் உறவினர்களும், பாஜகவினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.