இலங்கையின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி 27 வயதில் காலமானார்



இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி குருப்பு தனது 27ம் வயதில் காலமானார்.
கடந்த 2020ம் ஆண்டு ஓஷதிக்கு புற்று நோய் ஏற்பட்டதுடன் இரண்டாண்டுகளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி 2015ம் ஆண்டில் இலங்கை தேசிய பூபந்து அணியின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் ஓஷதி பூபந்து போட்டியில் மகளிர் பிரிபில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஓஷதி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.