சபரிமலையில்மாசி மாத பூஜைகளுக்காக நடை திறப்பு| Dinamalar

சபரிமலை:மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.
மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின், 18ம் படி வழியாக சென்று ஆழியில் தீ வளர்ப்பார். இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். பிப்.13 அதிகாலை, 5:00 மணி முதல் பூஜைகள் துவங்கும். 17 இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். பிப்., 13 முதல் 17 வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட, ‘நெகட்டிவ்’ பரிசோதனை சான்றிதழுடன் செல்ல வேண்டும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.