சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 110 பேருக்கு பாதிப்பு உறுதி

பெய்ஜிங்,
உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. 
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 37 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 73 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சீனாவில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அங்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.