துாதுர் — முன்டுவள்ளி இடையே புதிய பாலம் பணிகளை துவக்கம்| Dinamalar

பெங்களூரு-ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், துாதுர் — முன்டுவள்ளி இடையே, புதிய பாலம் பணிகளை துவங்க, முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புதல் அளித்துள்ளார்.ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், பா.ஜ., எம்.எல்.ஏ.,வுமான, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, தன் தொகுதி தலைவர்கள் குழுவுடன், முதல்வர் பசவராஜ் பொம்மையை, நேற்று சந்தித்தார். துாதுர் – முன்டுவள்ளி புதிய பாலம் பாலம் கட்ட, ஒப்புதல் அளிக்கும்படி கோரினார்.இப்பணிகள் முடிவடைந்தால், குப்பள்ளி, மிருகவதே, சிப்புலகுட்டே, சிருங்கேரி, ஹொரநாடு, என்.ஆர்.புரா போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்ல, உதவியாக இருக்கும்.பல்வேறு கிராமங்களிலிருந்து, மாளூரு பள்ளி, கல்லுாரிகளுக்கு படிக்க வரும் மாணவர்களும் பயனடைவர் என, குழுவினர் விவரித்தனர். இதை ஏற்றுக்கொண்ட முதல்வரும், பணிகளை துவங்க ஒப்புதல் அளித்தார்.தீர்த்தஹள்ளி மக்களின், நீண்ட நாள் வேண்டுகோள் தற்போது நிறைவேறியுள்ளது. துாதுர் – முன்டுவள்ளி இடையே, துங்கா ஆற்றுக்கு குறுக்கே, 20 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்படும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.