விமானத்தில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியர்! பயணியின் புகாரால் பரபரப்பு..



நியூ ஜெர்ஸியிலிருந்து லண்டன் வந்த விமானத்தில் தன்னை பிரித்தானியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரமான Newark-ல் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 40 வயது பெண் ஒருவரை, பிரித்தானியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தாக Heathrow விமான நிலைய பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

விமான பயணத்தின்போது பயணிகள் உறங்கி கொண்டிருந்ததாகவும் அப்போது பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதான நபர் கட்டாயப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஜனவரி 31-ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை நடந்ததாக கூறப்படுகிறது. விமானம் காலை 6.30 மணிக்கு லண்டனில் தரையிறங்கிய நிலையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனால், தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான பயண முடிவில் அந்த நபர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்திய லண்டன் விமான நிலைய காவல்துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள் துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்பட்ட விமானப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை அவர்கள் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த விவகாரத்தில், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் லண்டன் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு ஓத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.