ஒரு மகாராஜா இங்கிருக்கிறார்… மற்றொருவர்… ‘மை நேம் இஸ்’ ஜோதிராதித்ய சிந்தியா: ஒன்றிய அமைச்சரை கிண்டலடித்த ஆதிர் ரஞ்சன்

புதுடெல்லி: எனது பெயர் ஜோதிராதித்யா சிந்திய என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் தெரிவிக்க விரும்புகிறேன்’ என ஒன்றிய அமைச்சர் மக்களவையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவை கேள்வி நேரத்தின் போது  காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை (மத்திய பிரதேச காங்கிரசில் இருந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் விலகியவர். இதனால், அங்கு பாஜக ஆட்சி அமையக் காரணமானது. இதற்கு பரிசாக அவருக்கு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது) நோக்கி பேசுகையில், ‘ஒரு மகாராஜா (மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் சிந்தியா) இங்கே இருக்கிறார்; மற்றொரு மகாராஜா ‘ஏர் இந்தியா’ (சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்டது’ என்று கிண்டலடித்து பேசினார். இதற்கு பதிலளித்த சிந்தியா, ‘எனது பெயர் ஜோதிராதித்ய சிந்தியா என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எனது கடந்த காலத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் விவாதித்து வருகிறார். இது ஏற்புடையது அல்ல’ என்று பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.