குளிக்க சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்.. விருதுநகர் அருகே நிகழ்ந்த சோகம்..!

குளிக்க சென்ற பெண் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்தம்மாள். இவர் தனது கணவருடன் கரூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது உறவினர்கள் சிலருடன் குளிப்பதற்காக அங்குள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார். கிணற்றில் குளித்து கொண்டிருக்கும் போது அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்க முயற்சித்தனர்.

இதுகுறித்து, தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அவரை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அவரின் சடலத்தை மீட்க தீயணைப்புதுறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.