சமையல் செய்யும் மூதாட்டிக்கு நடந்த விபரீதம்.. திருநெல்வேலியில் நடந்த சோகம்..!

சமையலறையில் இருந்து தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள்  என்ற மனைவி இருக்கிறார். சம்பவதன்று அவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் உடையில் தீப்பற்றியது.

உடலில் தீப்பற்றியதால் அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.