புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை தேடி வரும் போலீசார் .! <!– புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டு முன்பு நாட்டு வெடிகு… –>

புதுச்சேரியில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான இருதயராஜ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக தேர்தல் பணியை மேற்கொண்டவர்.

மாலை நான்கரை மணியளவில் மர்ம நபர் ஒருவன், நாட்டு வெடிகுண்டை இருதயராஜ் வீட்டு வாசலில் வீசியுள்ளான். குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்த நிலையில், இருதயராஜ் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.