3வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. கோவிட் காரணமாக அனைத்து போட்டிகளும் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2- 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

மூன்றாவது, கடைசி போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.