சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை எழும்பூரைச் சேர்ந்த இந்திய ஜனநாயக இயக்கத்தின் தலைவர் அம்பேத் வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர்கள் பொது பிரிவில் 16 வார்டுகளும், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும் என 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீடு கொள்கைப்படி, பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 36 வார்டுகளை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். எனவே கூடுதலாக 4 வார்டுகளை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, வார்டு மறுவரையறை குறித்து 2018ம் ஆண்டே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், வார்டு மறுவரையறையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பாஜக தனித்து நிற்பதால் என்ன பயன்? – எச்.ராஜா சொன்ன ரகசியம்!
மேலும், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கி விட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.